மதுரையில் நரிக்குறவர் காலனியில் மக்களுக்கு காவல்துறையினர் நேரில் சென்று உதவி
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உணவின்றி தவித்த மக்களுக்கு சிலைமான் காவல் நிலைய சரகர் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் அல்லாத இடம் பெயர்ந்த ஏழை எளிய 20 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 வகையான காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை *ஏடிஎஸ்பி* *திருமதி.வனிதா* அவர்கள் *டிஎஸ்பி* *திரு. நல்லு* அவர்கள் ஊமச்சிகுளம் ஆகியோர் தலைமையில் மாடசாமி காவல் ஆய்வாளர் சிலைமான் வட்டம் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் மற்றும் காவலர்கள் இணைந்து நரிக்குறவர் காலனியில் உதவிகள் செய்தனர். காவல்துறையினரின் இந்த உதவியை பாராட்டி நரிக்குறவ காலனி மக்கள் நன்றி தெரிவித்தனர். காவல்துறை மக்களின் நண்பன் என்பதை தொடர்ந்து மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது. நண்பர்கள் என்ற பெயரிலே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரக்கூடிய பொதுமக்களையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். காவல்துறையினரின் இந்த செயல்பாடுகள் மக்களின் சேவை செய்யும் தொண்டாக வே காவல்துறையினர் கருதுகின்றனர்.